|
பொதுக்கட்டமைப்பை
அமைப்பதில் அரசாங்கம் தொடர்ந்து ஏமாற்றி வருவதால் இது தொடர்பில்
தாங்கள் தனித்து செயற்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும்ää இது
குறித்துத் தலைமைப் பீடம் விரைவில் சில முக்கிய முடிவுகளை
எடுக்குமெனவும் விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் திரு.
புலித்தேவன் தெரிவித்துள்ளார்.
மேலும் கடற்கோள் அனர்த்த
முகாமைத்துவத்துக்கான பொதுக்கட்டமைப்பை உருவாக்குவது குறித்து
பிந்திய நிலை பற்றித் திரு. புலித்தேவன் கூறுகையில் நோர்வேயின்
சிறப்புச் சமாதானத் தூதுவர் திரு. எரிக் சொல்ஹெய்ம் இம்முறை இலங்கை
விஜயத்தின் போது பொதுக்கட்டமைப்புக் குறித்துச் சில முக்கிய முடிவுகள்
எட்டப்படுமென எமக்குத் தெரிவிக்கப்பட்ட போதிலும் அவர் ஜனாதிபதியைச்
சந்திக்காததாற் பெரும் ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியுடன் சில
முக்கிய முடிவுகள் தொடர்பாக ஆராய இருந்தார். ஆனாலும் திட்டமிட்டபடி
இச்சந்திப்பு நடைபெறவில்லை எனவும் தெரிவித்தார்.
|